Header Ads

test

அமெரிக்கக் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்தியா நாட்டைச் சேர்ந்த தமிழ் இளைஞரை அமெரிக்கக் காவல்றையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான  நதானியல் பிரசாத் என்ற இளைஞரை சுட்டுக்கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.

இவரை ஒரு குற்ற வழக்கு ஒன்றுக்காக காவல்துறையினர் தேடிவந்த நிலையில், பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர்  ஒரு மகிழுந்தில் சென்று கொண்டிருந்ததை அவதானித்த காவல்துறையினர் தகவலை போக்குவரத்துக் காவல்துறையினருக்கு வழங்கினர்.

அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப்  காவல்துறையினர் குறித்த இளைஞரை  பிடிக்க தீவிர முயற்சித்த போது காவல்துறையைக் கண்ட பிரசாத் மகிழுந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார்.

தப்பி ஓடிய பிரசாத்தை துரத்திய காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே  மடக்கி பிடிக்க சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டுள்ளார்.

உடனே காவல்துறையினர் பிரசாத்தை நோக்கி  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார் பிரசாத்.

No comments