Header Ads

test

முல்லைதீவில் ஊடகவியலாளர்களிற்கு தலையிடி தராத இராணுவம்!



முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் சுயாதீனனமாக பணிபுரிய இராணுவம் இடையூறு வழங்காதென இராணுவத்தரப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூல ஆவணம் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.


அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை கடந்த மாதம் 19 ம் திகதி வழிமறித்த இராணுவம் அவரது ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்ததோடு அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர்.


இந்நிலையில் தனது ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதனடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் மற்றும் இராணுவ தரப்பினரை வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைத்திருந்தனர்.


இந்நிலையில் வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் நடைபெற்ற விடயங்களை தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டமை தொடர்பில் என்ன பரிகாரம் கிடைக்க வேண்டுமென கோரப்பட்டதற்கு, குறித்த ஊடகவியலாளரால் தான் மற்றும் சக ஊடகவியலாளர்கள் சுயாதினமாக பணிபுரிய இராணுவம் இடையூறு வழங்க கூடாது எனவும் எனக்கு உயிராபத்தை விளைவிக்க கூடிய யாரும் அங்கு இல்லை எனவே அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அதற்கு இராணுவ தரப்பே பொறுப்பு எனவும் அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் இராணுவத்தால் நிகழாது என உத்தரவாதம் கோரப்பட்டது.

No comments