Header Ads

test

யாழில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாணம், சிறுத்தீவில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற தீர்மானித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். சிறுத்தீவில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டன.
இதன்போது, 98 டெட்டனேட்டர்கள், சீ-4 வெடி மருந்து உள்ளிட்ட வெடிபொருட்களும் கேபிள் வயர்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ள இவற்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

No comments