Header Ads

test

4வது நாளாகவும் தொடர்கிற வேலை நிறுத்த போராட்டம்


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழகம் - ராமேசுவரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது.

இதனால், சுமார் 5 கோடி இந்திய ரூபாய்கள் அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வேலைநிறுத்தத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், மீன்பிடி உபதொழில்களை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரது தொழில் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும், தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

No comments