இந்திய மீனவர்கள் 07 பேர் கைது


சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (24) அதிகாலை வடக்கு கடற்படை வீரர்களால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் அலுவலகத்தின் உதவி பணிப்பாளர் எஸ். சிவகரன் கூறினார்.

இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவ விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment