தொடர்ந்து முறுகலில் வவுனியா பேரூந்து நிலையம்?


வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை சுமூகமாக இயக்குவது தொடர்பில் தொடர்ந்தும் குழப்ப நிலை நீடிக்கின்றது.

நேற்றைய தினமான யூன் முதலாம் திகதி முதல் இணைந்த பஸ் சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பேரூந்து சேவையை ஆரம்பிக்க ஏதுவாக புதிய பேரூந்து நிலையம் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.அதனையடுத்து இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இணைந்த சேவை மேற்கொள்ளுவதற்கான அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தனியார் , இ.போ.ச பேரூந்துனள் பேரூந்து நிலையத்தில் தரித்து நிறுத்தாமல்; நிலையத்திற்கு முன்பாக வெளிசெல்லும் பாதையில் தரித்து பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

இதன் போது, தனியார் பேரூந்து ஒன்று பஸ் நிலையத்தில் வெளிச்செல்லும் பாதையூடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்ப நிலை ஏற்பட்டது.

தமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன், இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.தற்போது, காவல்துறை; பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும்இ.போ.ச , தனியார்  பேரூந்து பிரச்சினை சுமுகநிலைக்கு வரவில்லை.

இரு தரப்புக்களின் பின்னாலும் அரசியல் சக்திகள் உள்ளதுடன் அவை முதலமைச்சரிற்;கு இவ்விடயத்தில் தலையிடியை கொடுக்க முற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. 

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment