Header Ads

test

தவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கும் இளைஞர்கள் நிதி அனுப்பிவருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தான் வழங்கிய 7000 ரூபாவினை திருப்பி வழங்குமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கோரியிருந்தார்.  இந்நிலையில் நிலையில் கிழக்கு மாகாண இளைஞர்கள் உண்டியல் குலுக்கி ஆளுக்கு ஒரு ரூபா தாருங்கள் என தவராசாவிற்கு அனுப்புவதற்கு நிதி சேகரித்துவருகின்றனர்.

இந்நிலையில் தமது பங்களிப்பு நிதி என யாழில் சில இளைஞர்கள் தவராசாவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு சிறிய அளவிலான நிதிதியினை அனுப்பிவருகின்றனர். அவ்வகையில் இளைஞர் ஒருவர் 500 ரூபாவினை அனுப்பிவிட்டு “எனது பங்களிப்பினை நான் அனுப்பி வைத்துள்ளேன்” என சமூக வலைத்தளத்தில் அதனைப் பகிர்ந்துள்ளார்.

No comments