Header Ads

test

எனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு. என்னுடைய வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது அந்த நிகழ்வுக்கு முன் ஏதாவது ஒரு பாம்பு என் வீட்டிற்கு வந்து போகும் எனத்  தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் அன்னதான மடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எனது பரீட்சைகள் பதவி உயர்வுகளின் போது இவ்வாறு நடந்துள்ளது. சட்டக்கல்லூரியில் பரீட்சைக்காக தோற்ற இருந்தபோது பாம்பை காணவில்லை. இதனால் கவலை அடைந்திருந்தேன். அப்போது எனது தந்தையார் இறந்துவிட்டார். நான் பரீட்சையில் தோற்றமுடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு எனக்கும் பாம்புக்கும் தொடர்பு அதிகம் எனத்  தெரிவித்தார்  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

No comments