Video Of Day

Breaking News

ஐந்தாவது நாளாகவும் தொடரும் இரணைத்தீவு போராட்டம்


இரணைத்தீவில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி, பொதுமக்கள் அந்த தீவில் ஐந்தாம் நாளாகவும் தங்கி இருந்து போராட்டம் நடத்தி வருவதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களது பூர்வீகக்காணியை விடுவிக்க கோரி 362 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரணைத்தீவுக்கு சென்று அங்கிருந்து தங்களது போராட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலர் சந்தித்திருந்தனர்

No comments