நல்லூர் ஆலயத்திற்கு அருகில் விரைவில் பௌத்த விகாரை - ரவிகரன்

நல்லூர் ஆலயத்துக்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்று (31) கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் இடம்பெற்றது.

அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய், நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து, சட்டவிரோதமான மீன்பிடிமுறைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருகின்றேன்.

கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு சாலை, சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது.

ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகின்றது” என தெரிவித்தார்.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment